ஈரோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் கர்நாடக அணிகள் முதலிடம் பிடித்தன
Feb 24 2020 2:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான எறிபந்து போட்டியில், கர்நாடக அணிகள் முதலிடம் பிடித்தன. தமிழ்நாடு எறிபந்து சங்கத்தின் சார்பில் தேசிய அளவிலான எறிபந்து போட்டிகள், ஈரோடு அருகேயுள்ள கதிரம்பட்டியில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, டெல்லி, சட்டீஸ்கர், மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. மூன்று நாட்களாக நடைபெற்று வந்த இப்போட்டிகளின் இறுதியாட்டத்தில், ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவுகளிலும் கர்நாடகா அணி முதல் இடத்தையும், தமிழ்நாடு அணி இரண்டாமிடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இப்போட்டியில் சிறந்து விளையாடிய வீரர் மற்றும் வீராங்கணைகள், அடுத்த மாதம் தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச அளவிலான போட்டியில் இந்திய அணிக்காக விளையாட உள்ளனர்.