ஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் : பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது இந்தியா
Feb 25 2020 7:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.சி.சி., மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், பங்களாதேஷ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
ஐ.சி.சி., மகளிர் ஏழாவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் நடைபெற்ற முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தியது. இந்நிலையில், பெர்த்தில் நடைபெற்ற லீக் சுற்றின் தனது இரண்டாவது போட்டியில், பங்களாதேஷ் அணியை, இந்திய அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி கேப்டன் சல்மா கதுன், இந்திய அணியை பேட்டிங் செய்யும்படி அழைத்தார். இதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியில், ஷபாலி வெர்மா அதிரடியாக விளையாடி, 17 பந்துகளில், 4 சிக்சர்கள் அடித்து 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய Rodrigues 34 ரன்களிலும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 142 ரன்கள் எடுத்தது.
143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணியில், முர்சிடா கதுன், நிகர் சுல்தானா தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில், பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய மகளிர் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் ஷபாலி வெர்மா, ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.