திருச்சியில் கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டி : கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி அணி சாம்பியன்
Mar 6 2020 6:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் மாநில அளவில், கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கூடைப்பந்தாட்டப் போட்டியில், கோவை பிஎஸ்ஜி கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற போட்டியில் கோவை, திருச்சி, தூத்துக்குடி, சென்னை, திண்டுக்கல், மற்றும் சேலம் மாவட்டங்களில் இருந்து, 16 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். 4 அணிகளாக பிரிக்கப்பட்டு, லீக் மற்றும் சூப்பர் லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. புள்ளிகளின் அடிப்படையில், கோவை பிஎஸ்ஜி கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.