கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைப்பு - பி.சி.சி.ஐ. அறிவிப்பு
Mar 13 2020 5:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, அடுத்த மாதம் 15-ம் தேதி வரை ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சீனாவில் பரவிய கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில், கொரோனா வைரசுக்கு, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில், 70-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஐ.பி.எல்., எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை, ரசிகர்களின்றி நடத்தும்படி, ஐ.பி.எல்., நிர்வாகத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், வரும் 29-ம் தேதி தொடங்கவிருந்த ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை, அடுத்த மாதம் 15-ம் தேதி வரை ஒத்தி வைப்பவதாக, பி.சி.சி.ஐ., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக, ஐ.பி.எல்., அணிகளின் நிர்வாகிகளுடன், பி.சி.சி.ஐ., நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.