2020-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் சீசன் காலவரையின்றி ஒத்திவைப்பு : பி.சி.சி.ஐ. அறிவிப்பு
Apr 15 2020 5:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2020ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக, பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி கடந்த மாதம் 29-ம் தேதி மும்பையில் தொடங்க இருந்தது. கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக இப்போட்டி இன்று வரை தள்ளி வைக்கப்பட்டது. வெளிநாட்டினருக்கான விசா நிறுத்தி வைக்கப்பட்டதால் வெளிநாட்டு வீரர்களும் இந்தியாவுக்கு வந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருதும் சூழலில், நடப்பு சீசன் தொடரை காலவரையின்றி ஒத்திவைப்பதாக பி.சி.சி.ஐ. இன்று அறிவித்துள்ளது.