T20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவது சிரமம் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தகவல்
Jun 18 2020 11:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தொற்றுக்கு இடையே இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்துவது சாத்தியமற்றது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 13ம் தேதியிலிருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்த சூழலில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் 16 நாட்டு அணிகளை ஆஸ்திரேலியாவுக்கு வரவைக்க முயற்சிப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.