எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு இரங்கல் - ஐபிஎல் கிரிக்கெட்டில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்
Sep 26 2020 10:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மறைந்த திரு.எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு மரியாதை செலுத்துவிதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டையுடன் கிரிக்கெட் விளையாடினர்.
பின்னணி பாடகர் திரு.எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். பல்வேறு வழிகளிலும் நமது வாழ்க்கையை செதுக்கிய திரு.எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணித்து விளையாடியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.