ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 32 ஆவது லீக் ஆட்டம் : 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அசத்தல் வெற்றி
Oct 17 2020 10:22AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அசத்தல் வெற்றி பெற்றது.
துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 32 வது ஆட்டத்தில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன், பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. கொல்கத்தா அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களை சேர்த்தது. கொல்கத்தா அணியில் பேட் கம்மின்ஸ் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 53 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து, 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா அணியை எளிதில் வீழ்த்தியது. 16.5 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து வெற்றியை ருசித்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக குயிண்டன் டி காக் ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.