தமிழக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணிக்கு தேர்வான திருப்பூர் வீரர் - துபாயில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கவிருப்பதால் பொதுமக்கள் பாராட்டு
Oct 19 2020 11:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணிக்கு காங்கேயத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் துபாய் சென்று விளையாடவிருப்பதால், கிராம மக்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
Roll Visuals
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான லட்சுமணன் என்பவர் கிரிக்கெட் மீது தீராத ஆர்வம் கொண்டவர். ஒரு கிரிக்கெட் வீரராகவும் திகழும் அவர் ஒரு மைதானத்தை உருவாக்கி அங்கு தனது மகன் மற்றும் அங்குள்ள பிற வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். அவரது திறமையை அறிந்த கிரிக்கெட் பயிற்சியாளரான வெங்கடேஷ் என்பவர் மாற்றுத்திறனாளி அணியில் சேர்ந்து விளையாடுமாறு அவரை ஊக்கப்படுத்தியுள்ளார். இதையடுத்து, சென்னை சூப்பர் ஸ்டார் மாற்றுத்திறனாளி அணிக்கு லட்சுமணன் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், வரும் நவம்பர் மாதம் துபாயில் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரியம் சார்பில் 5 அணிகள் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க லட்சுமணனும் தேர்வு செய்யப்பட்டதால், அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். லட்சுமணனின் விடா முயற்சி மற்றும்திறமையால் தமிழக அணிக்கு தேர்வாகி இருப்பதை காங்கேயம் பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.