ஆசிய அளவிலான ஆன்லைல் செஸ் போட்டி : இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் வாங்கித்தந்த சேலம் இளம்பெண்
Oct 31 2020 5:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆசிய அளவிலான ஆன்லைல் செஸ் போட்டியில், சங்ககிரியைச் சேர்ந்த இளம்பெண் P.V. நந்திதா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, ஆசிய நாடுகளுக்கு இடையேயான செஸ் தொடர் ஆன்லைனில் நடைபெற்றது. கடந்த 10-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில், இந்தியா, இந்தோனேஷியா உட்பட 31 நாடுகள் பங்கேற்றன. இந்த செஸ் தொடரில் இந்திய பெண்கள் அணி சார்பில், தமிழகத்தைச் சேர்ந்த P.V. நந்திதா மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பத்மினி, பக்திகுல்கர்னி, வைசாலி, மேரி ஆகியோர் பங்கேற்றனர். இறுதிச்சுற்றுவரை சிறப்பாக விளையாடிய சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த P.V. நந்திதா என்ற இளம்பெண், இந்திய அணி தங்கப்பதக்கம் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தினார். மத்திய மாநில அரசுகள் செஸ் விளையாட்டை ஊக்கப்படுத்தி உதவி புரிந்தால், இந்திய நாட்டிற்காக மேலும் பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்கப்போவதாக தங்கப்பதக்கம் வென்ற சாதனை இளம்பெண் P.V. நந்திதா தெரிவித்தார்.