சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய பெண்ணிடம் காதலை சொன்ன இந்திய இளைஞர் - இந்தியா-ஆஸ்திரேலிய போட்டியின்போது நடந்த ருசிகர சம்பவம்
Nov 30 2020 8:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா-ஆஸ்திரேலியா 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது, மைதானத்தில் ஆஸ்திரேலிய பெண்ணுக்கு இந்திய இளைஞர் ஒருவர், காதலை ப்ரப்போஸ் செய்த சம்பவம், மைதானத்தில் இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி, சிட்னியில் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டி நடந்துகொண்டிருந்தபோது, இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர், ஆஸ்திரேலிய பெண் ஒருவரிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். மோதிரம் கொடுத்து ப்ரப்போஸ் செய்த இளைஞரின் காதலை அந்த பெண்ணும் ஏற்றுக்கொண்டார். இந்தியா-ஆஸ்திரேலியா ஆட்டத்தை தாண்டி, இந்த காதல் காட்சியை இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் கைதட்டி ரசித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.