ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் இடம்பிடித்தார் நடராஜன் - நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழக வேகப்பந்து வீச்சாளர் அணியில் அறிமுகம்
Dec 2 2020 11:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கான்பெராவில் இன்று நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் முதல்முறையாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதில் டாஸ் வென்ற இந்திய தற்போது பேட் செய்து வருகிறது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஏற்கெனவே இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது. இந்த தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் சற்று நேரத்தில் தொடங்குகிறது. கடந்த போட்டிகளில் பும்ரா, சகல் போன்ற முன்னணி பந்து வீச்சாளர்களின் மோசமான பவுலிங்கால் இந்தியா தோல்வி அடைய நேரிட்டது. கடந்த இரண்டாவது போட்டியிலேயே களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு இன்றைய போட்டியில் இடம் கிடைத்துள்ளது. இது அவருக்கு அறிமுக போட்டியாகும். இந்திய கிரிக்கெட் அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அறிமுகமாகும் தமிழக வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமை நடராஜனுக்கு கிடைத்துள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.