ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் - 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 62 ரன்கள்
Jan 16 2021 2:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியில், கேப்டன் டிம் பெய்ன் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். சீரான இடைவெளிகளில் இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தியதை அடுத்து, 369 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில், நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு, விரைவில் ஆட்டமிழந்து தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் அதிர்ச்சி அளித்தார். ரோகித் சர்மா 44 ரன்களில் ஆட்டமிழந்தார். 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்களை இந்திய அணி எடுத்திருந்த நிலையில், மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக, இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வருவதாக நடுவர்கள் அறிவித்தனர். புஜாரா 8 ரன்களுடனும், கேப்டன் ரகானே 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மூன்றாவது நாள் ஆட்டம் நாளை அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு தொடங்குகிறது.