கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி - விரைவில் மீண்டு வருவேன் என நம்பிக்கை
Apr 2 2021 12:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த 27-ம் தேதியன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், சிறிய அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், குறிப்பிட்டிருந்தார். 6 தினங்களாக வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார். இன்னும் சில தினங்களில் தான் வீடு திரும்புவேன் என நம்புவதாகவும், தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.