டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமித் பங்கல் தோல்வி
Jul 31 2021 11:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டோக்கியோ ஒலிம்பிக்கில், ஆடவருக்கான Flyweight குத்துச்சண்டைப் போட்டியில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அமித் பங்கல் தோல்வியடைந்தார்.
ஒலிம்பிக் குத்துச்சண்டை ஆடவர் 48 கிலோ எடைபிரிவுக்கான Flyweight குத்துச்சண்டைப் போட்டியின் காலிறுதி முந்தைய சுற்றில், இந்திய வீரர் அமித் பங்கல், கொலம்பியாவின் Yuberjen Martinez-ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தொடக்க முதலே கொலம்பிய வீரர் ஆதிக்கம் செலுத்தினர். இறுதியில், 4-க்கு ஒன்று என்ற கணக்கில் அமித் பங்கலை தோற்கடித்து, கொலம்பிய வீரர் காலிறுதிக்கு முன்னேறினார்.