லண்டன் ஓவல் மைதானத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு கிடைத்த டெஸ்ட் கிரிக்கெட் வெற்றி - பிரதமர் நரேந்திர மோடி வீரர்களுக்கு பாராட்டு
Sep 7 2021 8:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
லண்டன் ஓவல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி வெற்றி பெற்றிருப்பதை பிரதமர் திரு.மோடி பாராட்டியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 4வது போட்டி லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. நேற்று முடிவடைந்த இந்தப் போட்டியில் இந்தியா இங்கிலாந்தை தோற்கடித்தது. இதன் மூலம் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஓவல் மைதானத்தில் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றது. இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் திரு.மோடி, இந்தியாவில் தடுப்பூசிகள் அதிகம் போடப்பட்டு சாதனை படைப்பதுபோல் இந்திய அணியின் வெற்றியும் மகத்தானது என தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவிற்கு அமைந்த மிகச்சிறந்த நாள் என்றும், எப்போதும் போல் இந்தியாவுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது என்றும் திரு.மோடி உணர்வுபூர்வமாக பதிவிட்டுள்ளார்.