காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான சைக்கிள் பயணம் : 3,600 கிலோமீட்டர் தூரத்தை 8 நாட்களில் கடந்து இளைஞர் சாதனை
Sep 8 2021 10:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான 3 ஆயிரத்து 600 கிலோமீட்டர் தூரத்தை, இளைஞர் ஒருவர் அதிவேகமாக சைக்கிளில் கடந்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் Narbal நகரைச் சேர்ந்த Adil Teli என்ற 23 வயது இளைஞர், கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி காலை 7.30 மணிக்கு, ஸ்ரீநகரின் Ghanta Ghar பகுதியில், தனது சைக்கிள் பயணத்தைத் தொடங்கினார். 3 ஆயிரத்து 600 கிலோமீட்டர் இலக்கைக் கொண்டு, மிகுந்த விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் பயணம் மேற்கொண்ட அவர், கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி காலை 9 மணியளவில், கன்னியாகுமரி வந்தடைந்தார். 3 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூரத்தை, 8 நாட்கள் ஒரு மணி நேரம் 37 நிமிடங்களில் கடந்ததற்காக, கின்னஸ் அமைப்பு, Adil Teli-யை சாதனையாளராக அங்கீகரித்துள்ளது. இதன்மூலம், உலகிலேயே அதிவேக சைக்கிள் பயணத்திற்கான கின்னஸ் உலக சாதனை விருதை அவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த Adil Teli, உலக சாதனை படைப்பதற்காக, பஞ்சாபில் கடந்த 6 மாதங்களாக கடுமையான சைக்கிள் பயிற்சி மேற்கொண்டதாக குறிப்பிட்டார்.