ஆன்லைனில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடக்கம் - தமிழக வீரர் ஆனந்த் தலைமையில் இந்திய அணி பங்கேற்பு
Sep 8 2021 10:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆன்லைன் மூலம் இன்று தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில், 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில், 12 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.
கடந்த ஆண்டு ஆன்லைன் மூலம் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்தியா, ரஷ்யா அணிகள் கூட்டாக சாம்பியன் பட்டத்தை வென்றன. இந்த ஆண்டுக்கான உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியும் ஆன்லைன் மூலம் நடக்கிறது. இந்த போட்டி இன்று தொடங்கி வரும் 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. 12 சுற்றுகளாக இந்த போட்டி நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும். 5 முறை உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் 12 பேர் கொண்ட இந்திய அணி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்கிறது. அனுபவம் மற்றும் இளம் வீரர்களின் சரியான கலவையாக இந்திய அணி உள்ளதாகவும், சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை வெல்வோம் என்றும் விஸ்வநாதன் ஆனந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.