நியூயார்க்கில் நடைபெறும் யு.எஸ். ஓபன் டென்னிஸ் - முதல் முறையாக அரையிறுதியில் நுழைந்தார் பிரிட்டனின் இளம் வீராங்கனை Emma Raducanu
Sep 9 2021 12:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
யு.எஸ். ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில், பிரிட்டன் வீராங்கனை Emma Raducanu முதல் முறையாக
அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
'கிராண்ட்ஸ்லாம்' பட்டங்களில் ஒன்றான யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டி, தற்போது நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில், தரவரிசையில் 11-ம் இடத்தில் உள்ள சுவிட்ஸர்லாந்து வீராங்கனை Belinda Bencic, பிரிட்டன் நாட்டின் இளம் வீராங்கனை Emma Raducanu-வை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தொடக்கம் முதலே அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்திய Emma Raducanu, 6-3, 6-4 என்ற நேர் செட்கணக்கில் Belinda-வை எளிதாக தோற்கடித்து, அரையிறுதிக்கு முன்னேறினார்.