ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்ற சாஜன் பிரகாஷ் கெளரவிப்பு : ரூ.5 லட்சம் பரிசு வழங்கியது என்.எல்.சி. நிறுவனம்
Sep 14 2021 8:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்ட சாஜன் பிரகாஷுக்கு என்.எல்.சி இந்தியா சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் திருமதி.சாந்தி மவுலியின் மகன் சாஜன் பிரகாஷ். இவர் நீச்சலில் உள்ளூர் போட்டிகள் மற்றும் தேசிய போட்டிகள், சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்று, இரண்டு ஒலிம்பிக் போட்டியில், இந்திய அணி சார்பில் கலந்து கொண்டார். அவரை கெளரவிக்கும் விதமாக என்.எல்.சி இந்தியா லிமிடெட் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பின்னர் அவருக்கு என்.எல்.சி நிறுவனத்தின் சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் பரிசு தொகையை என்.எல்.சி சேர்மன் திரு.ராகேஷ் குமார் வழங்கினார். இதையடுத்து நெய்வேலியில் உள்ள நீச்சல் குளத்திற்கு சாஜன் பிரகாஷ் பெயர் வைக்கப்பட்டது.