உலகக்கோப்பை தொடருக்குப்பின் டி-20 அணி கேப்டன் பதவியில் இருந்து விலகல் - விராட் கோலி அறிவிப்பு
Sep 17 2021 7:32AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
துபாயில் நடைபெறும் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின், இந்திய கிரிக்கெட் அணியின் டி-20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, தனது டிவிட்டரில் விடுத்துள்ள அறிவிப்பில், ஒருநாள் போட்டி, டெஸ்ட் மற்றும் டி-20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும், 9 ஆண்டுகளாக விளையாடி வருவதாகவும், கடந்த 6 ஆண்டுகளாக கேப்டனாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். தனது அதிகப்படியான பணிச்சுமையை குறைக்கும் நோக்கில், துபாயில் நடைபெறும் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின், இந்திய கிரிக்கெட் அணியின் டி-20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக நீடிப்பேன் என்றும், டி-20 போட்டிகளில் பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடுவேன் எனவும் தெரிவித்துள்ளார். அனைவரிடமும் கலந்து ஆலோசித்த பிறகே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ள விராட் கோலி, இதற்காக எனது பயணத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.