நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையேயான கிரிக்கெட் தொடர் ரத்து
Sep 17 2021 6:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருந்தது. இந்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இரு அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இருந்த நிலையில் கிரிக்கெட் போட்டிகள் ரத்தானது ரசிகர்களை அதிர்ச்சி அடையசெய்துள்ளது.