15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மேலும் 2 அணிகள் அறிவிப்பு - அகமதாபாத் மற்றும் லக்னோவை மையமாகக் கொண்டு 2 அணிகள் புதிதாக சேர்ப்பு
Oct 26 2021 6:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தியன் ப்ரீமியர் லீக் என அழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய எட்டு அணிகள் இடம்பெறுள்ளன. இந்நிலையில் 2022-ம் ஆண்டுக்கான 15-வது ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகள் பங்கேற்குமென பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்நிலையில், 2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் அகமதாபாத், லக்னோ ஆகிய நகரங்களை கொண்டு புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அகமதாபாத் அணியை லக்சம்பர்க்கை தலைமையிடமாக கொண்ட சிவிசி நிறுவனமும், கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட ஆர்பிஎஸ்ஜி குழுமம் லக்னோ அணியை ஏலத்தில் எடுத்துள்ளன. இப்போட்டியில் பங்கேற்க கட்டாக், கவுஹாத்தி, ராஞ்சி, தா்மசாலா உள்ளிட்ட நகரங்களின் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.