தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் களமிறங்குகிறார் விராட் கோலி
Jan 10 2022 4:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்பதில் தனது பணியை செய்து வருவதாகவும், தன்னைப் பற்றி வெளியிலிருந்து வரும் விமர்சனங்கள் குறித்து கவலைப்படவில்லை என்றும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற 2 போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று, சமநிலையில் உள்ளது. 3-வது டெஸ்ட் போட்டி, நாளை தொடங்கவுள்ளது. 2-வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக கேப்டன் விராட் கோலி பங்கேற்க முடியாத நிலையில், 3-வது போட்டியில் பங்கேற்கவுள்ளார். இதனிடையே மெய்நிகர் வழியாக செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி, 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாட முழு அளவில் தகுதியாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் புதிதல்ல என்றும், அதுகுறித்து கவலைப்படவில்லை என்றும் குறிப்பிட்ட விராட் கோலி, கிரிக்கெட்டில் எப்படி செயல்பட வேண்டும் என்பதில் மட்டுமே தான் தெளிவாக இருப்பதாக குறிப்பிட்டார்.