இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : கேப்டவுனில் இன்று தொடக்கம்
Jan 11 2022 7:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - தென் ஆஃப்ரிக்கா அணிகளுக்கிடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கேப்டவுனில் இன்று தொடங்குகிறது.
தென்ஆஃப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில், 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. ஜோகனர்ஸ்பெர்க்கில் நடைபெற்ற 2வது போட்டியில், தென் ஆஃப்ரிக்கா அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-க்கு 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இந்நிலையில், இரு அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, கேப்டவுனில் இன்று தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். முதுகுவலி காரணமாக 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய விராட் கோலி, கடைசி போட்டியில் நிச்சயம் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடரை வெல்ல, இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால், போட்டியைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.