டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகல் : விராட் கோலி அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி
Jan 16 2022 10:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இழந்தது. இந்திய அணி வீரர்களின் சொதப்பலே இதுக்கு காரணமெனவும், கேப்டன் பொறுப்பில் விராட் கோலி சரியாக செயல்படவில்லை எனவும் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணியின் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்து வந்த விராட் கோலி, இருபது ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். அதேப் போன்று, ஐபிஎல் கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் அவர் விலகியது குறிப்பிடத்தக்கது. விராட் கோலியின் இந்த முடிவு, அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.