விசா ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜோகோவிச் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி - ஆஸ்திரேலிய அரசின் நடவடிக்கையை உறுதி செய்தது அந்நாட்டு உச்சநீதிமன்றம்
Jan 16 2022 5:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க தன்னை அனுமதிக்குமாறு பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் 2-வது முறையாக தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் அவர் அந்நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவதுடன், மூன்று ஆண்டுகள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது. ஆனால் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. இதனால் போட்டியில் பங்கேற்க மெல்போர்ன் சென்ற அவர் தடுக்கப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். மேலும் அவரது விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்தது. இதை எதிர்த்து ஜோகோவிச் மெல்போர்ன் பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை முடிவில் ஜோகோவிச் விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் அந்நாட்டு குடியேற்றத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே, தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்தார். இதனால் அவர் மீண்டும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். இதையடுத்து ஜோகோவிச் விசா மீண்டும் ரத்தானதை எதிர்த்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததது. இருத் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஜோகோவிச்சின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் ஆஸ்திரேலிய ஒபன் தொடரில் பங்கேற்கும் அவரது கனவு தகர்ந்தது. மேலும் அவர் வெளியேற்றப்படவுள்ள நிலையில், அந்நாட்டு விதிமுறைகளின் படி மூன்று ஆண்டுகள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.