ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி- குஜராத்தை வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்தது பெங்களூரு
May 20 2022 11:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத்தை பெங்களூரு அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் விழ்த்தியது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிபட்சமாக ஹர்திக் பாண்டியா 62 ரன்களும், டேவிட் மில்லர் 34 ரன்களும் எடுத்தனர். 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி மற்றும் டூ பிளசிஸ் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பொறுப்புடன் ஆடிய விராட் கோலி அரை சதமடித்தார். இறுதியில், பெங்களூரு அணி 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் பிளே ஆப் சுற்றை பெங்களூரு அணி தக்க வைத்துள்ளது.