இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி - இந்தியா நேற்று ஒரே நாளில் இரண்டு தங்கப் பதக்கம் வென்று அசத்தல்
Aug 3 2022 7:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா நேற்று ஒரே நாளில் இரண்டு தங்கப் பதக்கம் வென்றுள்ளது. லான் பவுல்ஸ் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லான் பவுல்ஸ் பிரிவில் லவ்லி சௌபே, பிங்கி, நயன்மோனி சைகியா மற்றும் ரூபா ராணி டிர்கி அடங்கிய இந்திய மகளிர் அணியினர் வெற்றி பெற்றனர்.
இந்த நால்வரை கொண்ட இந்திய அணி இறுதிப்போட்டியில், அனுபவம் வாய்ந்த தென்ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது. இதில், இந்திய மகளிர் அணி 17-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்க பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. காமன்வெல்த் போட்டியில் லான் பவுல்ஸ் பிரிவில் இந்திய அணி வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும்.
இந்நிலையில், டேபிள் டென்னிஸ் ஆடவர் போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றுள்ளது. தமிழக வீரர்கள் சரத்கமல், சத்யன் ஞானசேகரன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி பதக்கம் வென்றுள்ளது.
பளுதூக்குதல் 96 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் விகாஷ் தாகூர்வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.