மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஐந்தாவது டி-20 கிரிக்கெட் போட்டி - 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
Aug 8 2022 8:19AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஐந்தாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. 4 போட்டிள் நிறைவடைந்த நிலையில், 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி இருந்தது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டி புளோரிடாவில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடியது. அந்த அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அணியில் சிம்ரன் ஹெட்மயர் மட்டும் தன் பங்கும் அதிரடியுடன் விளையாடி 56 ரன்கள் எடுத்தார். ஆனால் மற்ற வீரர்களோ சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அந்த அணி 15.4 ஓவர்களில் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-0 என்ற கனக்கில் இந்தியா கைப்பற்றியது.