ராஜபாளையத்தில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கான கைப்பந்து போட்டி : 420 வீரர்கள், 312 வீராங்கனைகள் பங்கேற்பு
Aug 8 2022 2:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், மாநில அளவிலான கைப்பந்து போட்டி தொடங்கியது.
மாநில அளவிலான யூத் சாம்பியன்ஷிப் கைப்பந்து போட்டி, மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் ராஜபாளையத்தில் நடைபெறுகிறது. 21 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்தப் போட்டிகளில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, அரியலூர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 35 அணிகளை சேர்ந்த 420 ஆண்களும், 26 அணிகளை சேர்ந்த 312 பெண்களும் பங்கேற்றுள்ளனர். காமராஜர் நகரில் உள்ள ஊர்காவல் படை மைதானம் மற்றும் தனியார் பள்ளி மைதானத்தில் உள்ள 5 ஆட்டக்களங்களில் பகலிரவாக 4 நாட்கள் இப்போட்டி நடைபெறுகிறது. போட்டியினை அ.ம.மு.க. விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் பயில்வான் திரு.கே.எஸ்.சந்தோஷ்குமார் தொடங்கி வைத்தார். இந்தியன் கைப்பந்து கழக தலைவர் திரு.உக்கிரபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.