காமன்வெல்த் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் ஆடவர், மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் : சத்யன் ஞானசேகரன் வெண்கலமும், சரத் கமல் தங்கப்பதக்கமும் வென்றனர்
Aug 8 2022 7:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காமன்வெல்த் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது. இதேபோல், டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் நம்பர்-1 வீராங்கனை பி.வி.சிந்து, கனடாவின் மிச்செல்லி ஆகியோர் போட்டியிட்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப்போட்டியில், கனடா வீராங்கனை மிச்செல் லீயை 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து, இந்தியாவின் பி.வி.சிந்து தங்கம் வென்றார்.
இதேபோல், காமன்வெல்த் பேட்மிண்டன் இறுதிப்போட்டியின் ஆடவர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் தங்கம் வென்றார். இந்தியாவின் லக்ஷயா சென், மலேசியாவின் சே யாங்கை, 19-21, 21-09, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
காமன்வெல்த் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் போட்டியில் இங்கிலாந்து இணையை தோற்கடித்து இந்திய வீரர்கள் சாத்வீக், சிராக்செட்டி இணை தங்கம் சென்று அசத்தினர். டேபிள் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில், இங்கிலாந்து வீரர் டிரிங் ஹாலை தோற்கடித்து, தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் வெண்கலப் பதக்கம் வென்றார். இதேபோல், டேபிள் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் லியாமை 4-1 என்ற செட் கணக்கில் தோற்கடித்து, தமிழக வீரர் சரத் கமல் தங்கம் வென்றார். இதன்மூலம், காமன்வெல்த் போட்டியில் 22 தங்கமும், 15 வெள்ளியும், 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 4-வது இடத்தில் இந்தியா உள்ளது.