காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் சிராஜ் ஷெட்டி, சாய்ராஜ் வென்றனர் - அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து
Aug 9 2022 12:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் சிராஜ் ஷெட்டி, சாய்ராஜ் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றுள்ளதற்கும், டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் சரத் கமல் தங்கம் வென்றுள்ளதற்கும், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், காமன்வெல்த் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்களான சிராஜ் ஷெட்டி, சாய்ராஜ் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளதற்கு தமது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று, டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவுப் போட்டியில், நம் மண்ணின் மைந்தர், இந்திய வீரர் சரத் கமல் தங்கம் வென்றுள்ளதற்கும், ஆடவர் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளதற்கும் தமது வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்வதாக சின்னம்மா தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் இறுதிப்போட்டி நாளன்று, நான்கு தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றிருப்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிப்பதாக, புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.