டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் அறிவிப்பு - 2022 லேவர் கோப்பை தொடரில் பங்கேற்பது உறுதி எனவும் தகவல்
Sep 16 2022 6:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில், அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 8 முறை விம்பிள்டன் பட்டம் உட்பட இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். தரவரிசையில் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தை பிடித்தவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரான ரோஜர் பெடரர், 2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஒற்றையர் ஆண்கள் பிரிவில் இதுவரை 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள பெடரர், 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பீட் சாம்ப்ராஸின் சாதனையை முறியடித்துள்ளார். ஆண்கள் ஒற்றையர் கிராண்ட்ஸ்லாமில் 27 முறை இறுதிப்போட்டி வரை முன்னேறியது இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனையாக கருதப்படுகிறது. தொழில்முறையில் 88 டென்னிஸ் தொடர்களில் வென்று டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனாக திகழும் ரோஜர் பெடரர், டென்னிஸ் உலகத் தரவரிசையில் தற்போது 3-வது இடத்தில் உள்ளார்.
பெடரரின் ஓய்வு அறிவிப்புக்கு, விராட் கோலி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவரது ரசிகர்கள் மிகுந்த கவலையில் மூழ்கியுள்ளனர்.