ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 20 ஓவர் தொடர் - பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடைபெறுகிறது முதல் போட்டி
Sep 20 2022 6:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடைபெற உள்ள முதல் போட்டியில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.
ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொரோனா காரணமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகிய நிலையில், அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் உலகக்கோப்பை 20 ஓவர் தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், இந்த தொடர் இந்திய அணிக்கு பயிற்சிக்களமாக அமைவது குறிப்பிடத்தக்கது.