இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் - லக்னோவில் நடைபெறும் முதல் போட்டியில் இரு அணிகளும் இன்று மோதல்
Oct 6 2022 11:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்றுள்ளது. டி-20 தொடரை இந்தியா வென்று நிலையில், இவ்விரு அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற 16 ஆம் தேதி தொடங்குவதால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான இரண்டாம் தர இந்திய அணி களம் இறங்குகிறது. இரு அணிகளிலும் சிறந்த வீரர்கள் இருப்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.