20-ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் : கால்பந்து ரசிகர்களுக்காக அமைக்கப்படும் தற்காலிக தங்குமிடம்
Nov 17 2022 4:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தைக் காணவரும் ரசிகர்களுக்காக சீனாவில் தயார் செய்யப்பட்ட தற்காலிக வீடுகள் வரவழைக்கப்பட்டுள்ளன. கத்தாரில் ஃபிஃபா உலகக் கோப்பை 2022 கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டியைக் காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் வரவுள்ளனர். இவர்களுக்கு தங்கும் வசதிகளை ஏற்படுத்தும் முயற்சிகளை கத்தார் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஒரு புதிய கிராமத்தை உருவாக்கி அங்கு வரிசையாக தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள கன்டெய்னர் வீகள் சீனாவில் தயாரிக்கப்பட்டு, கத்தார் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.