ரஷ்ய - உக்ரைன் போர் மற்றும் ஏவுகணை தாக்குதலால் பதற்றம் : கத்தார் செல்லும் வீரர்களுக்கு போலந்து அரசு அளித்த பாதுகாப்பு
Nov 19 2022 11:17AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உக்ரைன்- ரஷ்ய எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவும் நிலையில், கத்தார் நாட்டுக்கு போலந்திலிருந்து சென்ற கால்பந்தாட்ட வீரர்களுக்கு F-16 ரக போர் விமானங்கள் பாதுகாப்பாகப் பறந்து சென்றன. விளையாட்டு உலகின் கவனம் முழுவதும் கத்தார் நாட்டில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தின் மீது படிந்திருக்கும் நிலையில், போலந்து நாட்டிலிருந்தும் இந்த விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் சென்றுள்ளனர். ஏற்கெனவே ரஷ்யா - உக்ரைன் போர்ப் பதற்றம் மற்றும் கடந்த சில தினங்களுக்கு முன் போலந்தில் ஏவுகணை விழுந்தது போன்ற நிகழ்வுகளால் உச்சகட்ட அச்சம் நிலவும் நிலையில், போலந்து கால்பந்தாட்ட வீரர்களின் பாதுகாப்புக்காக அந்நாட்டு அரசு போர் விமானம் ஒன்றை அனுப்பிவைத்தது.