தயானந்த கிரி ஆசிரமத்தில் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் விராட் கோலி வழிபாடு
Jan 31 2023 12:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிரிக்கெட் வீரர் விராட் கோலி, மனைவி அனுஷ்கா சர்மாவுடன் ரிஷிகேஷில் உள்ள தயானந்த கிரி ஆசிரமத்தில் வழிபாடு நடத்தினர். இந்தியாவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. வரும் 9-ம் தேதி முதல் இருநாடுகள் இடையே ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டி தொடர்கள் நடைபெறவுள்ளன. இதனை முன்னிட்டு விராட் கோலி ரிஷிகேஷில் உள்ள தயானந்த கிரி ஆசிரமத்திற்கு சென்று சிறப்பு தரிசனம் செய்தார். இந்நிலையில், தயானந்த கிரி ஆசிரமத்தில் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் விராட் கோலி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.