முத்தரப்பு சர்வதேச கால்பந்து போட்டி : இந்திய அணிக்கு தமிழக வீரர் சிவசக்தி நாராயணன் தேர்வு
Mar 16 2023 2:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முத்தரப்பு சர்வதேச கால்பந்து போட்டியில் இந்திய அணிக்காக விளையாட தமிழக வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியா - கிர்கிஸ்தான் - மியான்மர் நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு சர்வதேச கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. மணிப்பூரில் உள்ள குமான் லம்பாக் மைதானத்தில் வரும் 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 23 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழக வீரர் சிவசக்தி நாராயணன் இடம்பிடித்துள்ளார். சிவகங்கை கண்டனூரைச் சேர்ந்த அவர், ஐஎஸ்எல் போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்.