ரத்த தானம், உடலுறுப்புகள் தானம் குறித்து விழிப்புணர்வு மாரத்தான் - 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு
Mar 19 2023 5:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பத்தூரில் ரத்த தானம், கண் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஹோஸ்ட் லயன் சங்கம் மற்றும் சமூக பணி துறை தூய நெஞ்சக் கல்லூரி இணைந்து நடத்திய இப்போட்டியை, மாவட்ட ஆட்சியர் பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தூய நெஞ்ச கல்லூரி அருகே தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி, பாச்சல், அச்சமங்கலம், மாக்கனூர், தாமலேரிமுத்தூர் என 12 கிலோமீட்டர் தூரத்தை கடந்து, ஆட்சியர் அலுவலகம் எதிரே நிறைவு பெற்றது. இந்த விழிப்புணர்வு மாரத்தானில் பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.