கேப்டன் தோனி உறுதியாக அடுத்த ஆண்டும் விளையாடுவார் : சி.எஸ்.கே. அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ திட்டவட்டம்
May 25 2023 5:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சி.எஸ்.கே. அணி கேப்டன் தோனி உறுதியாக அடுத்த ஆண்டும்
விளையாடுவார் என அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணியின் கேப்டனான தோனி, இந்த தொடருடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவார் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் தனது ஓய்வு முடிவு குறித்து தோனி இதுவரையில் எந்த தகவலும் அளிக்கவில்லை. இந்த நிலையில், தோனி அடுத்த ஆண்டு விளையாடுவார் என சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ கூறியுள்ளார். இம்பேக்ட் விதி தோனியை நீண்ட நாட்களுக்கு விளையாட வைக்கும் என்றும், கடினமான சூழல்களை எப்படி சமாளிப்பது என்பது தோனிக்கு தெரியும் எனவும் பிராவோ தெரிவித்தார்.