அகமதாபாத்தில் இன்று நடைபெறும் பிரம்மாண்ட இறுதி போட்டி : சென்னை - குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை
May 28 2023 12:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அகமதாபாத்தில் இன்று நடைபெறும் பிராமாண்ட இறுதி போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
அகமதாபாத் மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது. சென்னை அணியின் கேப்டன் தோனி இந்த தொடருடன் ஓய்வு பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதால், அவரை வெற்றியுடன் சாம்பியனாக வழியனுப்பும் முனைப்புடன் சிஎஸ்கே வீரர்கள் விளையாடி வருகின்றனர். 10வது முறையாக பைனலுக்கு முன்னேறி உள்ள சிஎஸ்கே 5வது முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. அதே சமயம் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் கோப்பையை தக்கவைக்கும் உறுதியுடன் உள்ளது.