ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு அறிவித்தார் சென்னை வீரர் அம்பத்தி ராயுடு... இறுதிப்போட்டிதான் கடைசி போட்டி என அறிவிப்பு...
May 29 2023 8:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
.எஸ்.கே. வீரர் அம்பத்தி ராயுடு, தனது கடைசி போட்டியில் விளையாடுவதாக பதிவிட்டுள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐ.பி.எல். தொடரில் விளையாடி வரும் அம்பத்தி ராயுடு தற்போது சென்னை அணியில் ஆடிவருகிறார். இறுதிப் போட்டியில், குஜராத் அணியை எதிர்த்து விளையாடும் அம்பத்தி ராயுடு, தாம் விளையாடும் கடைசி போட்டி இது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 2010 ல் மும்பை அணிக்காக தனது ஐ.பி.எல் பயணத்தை துவங்கிய அம்பத்தி ராயுடு, 2017 வரை அந்த அணிக்காக விளையாடியுள்ளார். பின்னர், 2018ல் சென்னை அணி அவரை வாங்கியது. தற்போது வரை சென்னை அணியில் இருக்கும் அவர், இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டி முடிந்தவுடன் தனது ஓய்வை, வாய்மொழியாக அறிவிப்பார் என தெரிகிறது.