இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை பங்கேற்க வைக்க முனைப்பு : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் உறுதிமொழிகளைப் பெற ஐசிசி உயரதிகாரிகள் லாகூர் பயணம்
May 31 2023 3:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் பங்கேற்பது தொடர்பாக சில உறுதி மொழியை பெற ஐசிசி உயரதிகாரிகள் லாகூர் சென்றுள்ளனர். இந்தியா பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் உள்ளநிலையில், இரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் உறவிலும் விரிசல் விழுந்துள்ளது. இந்த ஆண்டு பாகிஸ்தான் நடத்தும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்கேற்காது என பிசிசிஐ தெரிவித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்காமல் புறக்கணிப்போம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முரண்டு பிடித்து வருகிறது. இதுதொடர்பாக ஒரு சுமூக முடிவை எட்ட ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே தனது குழுவுடன் பாகிஸ்தான் சென்றுள்ளனர்.