இந்திய அணியின் செயல்பாடு குறித்து மனம் திறந்த சவுரவ் கங்குலி
Jan 7 2024 5:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்ஆப்ரிக்கா சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சவுரவ் கங்குலி மனம் திறந்துள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித் கங்குலி, இந்திய கிரிக்கெட் அணி மிகச் சிறந்த அணி என பாராட்டினார். ஒரு போட்டியில் தோற்றால், அந்த அணியே மோசமானது என மக்கள் பேசுவதாகவும், ஆனால், ஒருநாள் தொடர், டி20 தொடர், டெஸ்ட் தொடர் என அனைத்திலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டது மிகவும் நல்ல அறிகுறி எனவும் தெரிவித்தார். இந்திய அணி தனது அடுத்த தொடரை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ள சூழலில், கங்குலியின் கருத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.