பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கலில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி : காமராஜ் கால்பந்து கழக அணி முதலிடம் பிடித்து அசத்தல்
Jan 8 2024 2:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் காமராஜ் கால்பந்து கழக அணி முதலிடம் பிடித்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12ம் ஆண்டு மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 40 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் ஜி.டி.என் கலைக் கல்லூரி அணியும், காமராஜ் கால்பந்து கழக அணியும் மோதின. இதில், 3-2 என்ற கோல் கணக்கில் காமராஜ் கால்பந்து கழக அணி வென்று முதலிடம் பெற்றது. ஜி.டி.என் கலைக் கல்லூரி அணி 2வது இடமும், மதுரை சௌத்சோன் போலீஸ் அணி 3வது இடமும் பெற்றன. இதனை தொடர்ந்து, 3 இடங்கள் பிடித்த அணிக்கு கோப்பைகள் மற்றும் பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன.