தமிழகத்தைச் சேர்ந்த கபடி வீராங்கனை கவிதா செல்வராஜுக்கு வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருது : டெல்லியில் தேசிய விருதுகள் வழங்கி குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு கவுரவிப்பு
Jan 9 2024 4:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகளவில் சாதிக்கும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சாரியார் விருதை, பிரக்ஞானந்தா போன்று பல செஸ் வீரர்களை உருவாக்கிய தமிழக செஸ் பயிற்சியாளர் ஆர்.பி. ரமேஷுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து, வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருது தமிழகத்தின் முதல் கபடி வீராங்கனையான கவிதா செல்வராஜ் மற்றும் மஞ்சுஷா கன்வார், வினீத் குமார் ஷர்மா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மூவருக்கும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவித்தார்.