இந்தியா - ஆஸி. மகளிர் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி : தொடரை கைப்பற்றும் முனைப்பில் இரு அணியினரும் தீவிர வலைப்பயிற்சி
Jan 9 2024 1:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் தொடரில் சமநிலையில் உள்ளன. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் உள்ள டி. ஒய் பாட்டீல் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில், இரு அணி வீராங்கனைகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.