விளையாட்டுத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக உயரிய விருதுகளை பெற்ற தமிழக வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளருக்கு, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து
Jan 10 2024 1:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விளையாட்டுத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக உயரிய விருதுகளை பெற்ற தமிழக வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளருக்கு தனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத் துறையில் சிறந்த பங்களிப்பை அளிக்கும் வீரர், வீராங்கனைகளை கவுரவிக்கும் விதமாக ஆண்டுத்தோறும் அர்ஜூனா விருது, கேல் ரத்னா, துரோணாச்சாரியா, மேஜர் தயான் சந்த் ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன- டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவின் மூத்த சகோதரியும், தமிழகத்தின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் வீராங்கனையுமான வைஷாலிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்தார் - அர்ஜூனா விருது பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள வைஷாலிக்கு தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்வதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
அதேபோன்று உலகளவில் சாதிக்கும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சாரியார் விருதை பெற்ற தமிழக செஸ் பயிற்சியாளர் ஆர்.பி. ரமேஷ்க்கும் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். மேலும், வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருது பெற்ற தமிழகத்தின் முதல் கபடி வீராங்கனையான கவிதா செல்வராஜ்க்கும் தனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
'அர்ஜூனா விருது' பெற்ற வைஷாலி, வாழ்நாள் சாதனையாளருக்கான 'தயான்சந்த் விருது' பெற்ற கவிதா செல்வராஜ் மற்றும் துரோணாச்சாரியார் விருது பெற்ற ஆர்.பி. ரமேஷ் ஆகியோர் மென்மேலும் பல சாதனைகளை புரிந்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டி கொள்வதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.